நல்வரவு_()_


Sunday 23 May 2010

ஆ..அழகுக்கு அழகு:)


யாரும் திட்டிடக்கூடாது... அதிரா அடுத்தடுத்து தலைப்பாகப் போடத்தொடங்கிற்றாவே என:), ஜெய்..லானி அன்பாகத் தந்ததை அதுவும் ஒரு “அழகை” உடனே போடோணும்போல இருந்துது.... அதனால் போடுகிறேன். பின்னூட்டம் போடாவிட்டாலும், திட்டாமல் ரசித்துக்கொண்டு போங்கோ எனக்கு சந்தோஷமே....

மிக்க நன்றி ஜெய்..லானி!.





இது இன்று வந்த நிலவு:
நேரம் மாலை ஏழு மணி, கிழக்கிலே நிலவு, மேற்கிலே நல்ல சூரியன்.... ஒரே நேரத்திலே எடுத்த படங்கள்..







பின் இணைப்பு:
கங்கை ஆற்றில்... சீ... எங்கள் ஆற்றில் நேற்று வந்த Container Ship.... எந்தப்பெரிய கப்பல்ல்ல்ல்ல்ல்ல்

இதில் மேலே பறப்பவர் Seagull






யாராவது திட்டிப்போடுவினமோ என உடம்பெல்லாம் நடுங்குது பூஸாருக்கு... இது யார் அனுப்பிய படம் எண்டெல்லாம் குறுக்குக்கேள்வி யாரும் கேட்கப்படாதூஊஊஊஊ... எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவையாளரேதான்...



###################################
முள் நிறைந்த செடியிலேதான் அழகு வாய்ந்த ரோஜா பூத்து மலர்கிறது,
அதுபோல் சொல்லொண்ணாத துயரங்கிடையேதான் இன்பமும் மலரும்
###################################

22 comments :

  1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.

    படங்கள் அனைத்தும் அழகு. பூஸ் ஸ்வீட். ;)

    ReplyDelete
  2. அதிரா, வாழ்த்துக்கள். நிலவு அழகு. படங்கள் தெளிவாக இருக்கு.

    ReplyDelete
  3. விருதுக்கு வாழ்த்துக்கள் ,

    ஏ நிலவே ஏன் இந்த ஓரவஞ்சனை
    என்னை பார்தால் மட்டும் ஓடி ஒளிகிறாயே
    என்றாவது ஒரு நாள்
    என் இதய காமிராவில்
    ஆடாமல் அதிராமல் வராமலா போய்விடுவாய்

    ஏங்க விருதுக்கு ஸ்வீட் படம் போடல ,மத்த ரெண்டு பேரும் போட்டாங்களே ,நல்லா சைனீஸ் நூடுல்லாஅ போடுங்க அப்பதான் பாக்க குடல்புழு மாதிரி இருக்கும்.

    (நிலாவை தேடி கவித வந்துடுச்சி இனி அடுத்த டார்கெட் நிலாதான் )

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அதிரா,ஆறும்,வீடும்,கப்பலும்,படங்களும் அருமை.

    ReplyDelete
  5. ஆ... வாழ்த்துக்கு வாழ்த்தூஊஊஊஊஊ.

    =மிக்க நன்றி இமா.../// பூஸ் ஸ்வீட். ;) /// பூஸ் எண்டாலே எப்பவும் ஸ்வீட்தான் :):).

    =வாணி மிக்க நன்றி(ஆ...வாணி திருந்திட்டா..:))
    //நிலவு அழகு// அதனால்தான் எப்பவும் நிலவைப் பூனைக்கு ஒப்பிடுகினம்....கிக்..கிக்..கீஈஈஈஈஈ.

    =மிக்க நன்றி ஜெய்..லானி, இன்னும் உங்களுக்கு நிலவு வரேல்லை:(, அந்த ஏக்கம் தான் நல்ல நல்ல கவிதை எல்லாம் வருதோ??? இருந்தாலும் கவிதையில என்னையும் திட்டுறமாதிரித் தெரியுதே..(அதிரா..மல்).. சரி சரி முறைக்கவாணாம்.. ஸ்வீட் படமோ இங்கயுமோ? ஆஆஆஅ கடவுளே.. எங்கே தேம்ஸ்ஸ்ஸ்ஸ்???

    =மிக்க நன்றி ஆசியா..
    ///அதிரா,ஆறும்,வீடும்,கப்பலும்,படங்களும் அருமை//// நீங்கள்தான் என்னையும் சேர்த்து அருமை எனச் சொல்லிட்டீங்கள்... அதனால உடனடியா என் முடிவை மாத்திட்டேன்... தேம்ஸ் போவதை, ஆனால் இதை வாணியிடம் சொல்லிடாதையுங்கோ...

    ............................................

    தலைப்பைப் பார்த்தவுடன் வந்து பதிவு போட்டுள்ளீங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. விருதுக்கு வாழ்த்துக்கள் அதிரா.படங்கள் கொள்ளை அழகு.படம் எடுத்த கைகளுக்கு என் பெயரைச்சொல்லி ஒரு ஜோடி பிளாட்டின வளையல் வாங்கிப்போட்டுக்கொள்ளுங்கள் அதிரா.படம் 4 - 8 ஆஹா..கொள்ளை அழகு.குட்டி பூஸ் குளிரில் இப்படி நடுங்குதே!!

    ReplyDelete
  7. ஆறு-படம்-வீடு!!

    என்ன ஆச்சு உங்க எல்லாருக்கும்? படம் படமா எடுத்துப் போட்டு அசத்துறீங்கோ? காமிராவும், கையுமா ஜர்னலிஸ்ட் போல சுத்துறீங்க போல எல்லாரும்!! நடக்கட்டும்.. நடக்கட்டும்..

    ReplyDelete
  8. விருதுக்கு வாழ்த்துகள்...படங்கள் அனைத்து அழகு...

    ReplyDelete
  9. நிலவும் சூரியனும் அழகு அதீஸ்.. இந்த வாட்டி நல்ல வெளிச்சத்திலேயே நிலவைப் பிடித்துவிட்டீங்கள்...

    பூஸ் குளிரிலே நடுங்கிப் போய் கிடக்கிறார் போலும்... போர்வை அனுப்பவா??

    ReplyDelete
  10. //ஆ...வாணி திருந்திட்டா..//
    இல்லை திருந்துவது போல நடித்தேன். எப்பூடி என் நடிப்பூ???

    ReplyDelete
  11. //ஸ்வீட் படமோ இங்கயுமோ? ஆஆஆஅ கடவுளே.. எங்கே தேம்ஸ்ஸ்ஸ்ஸ்???//

    நம்ம ஆள் ஒருத்தர் பிரியானியை சுட்டு போட்ட மாதிரி போட்டிருக்கலாமே ( பேரெல்லாம் கேக்கப்பிடாது )

    ReplyDelete
  12. மிக்க நன்றி ஸாதிகா அக்கா, இன்றுதான் வரமுடிந்தது என்னால்.
    //படம் எடுத்த கைகளுக்கு என் பெயரைச்சொல்லி ஒரு ஜோடி பிளாட்டின வளையல் வாங்கிப்போட்டுக்கொள்ளுங்கள்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    குட்டி பூஸ் குளிரில் இப்படி நடுங்குதே!! // இல்ல ஸாதிகா அக்கா... அது வேஏஏஏஏஏற, இது வேஏஏஏஏஏஏஏஏஏற :)...

    ReplyDelete
  13. வாங்க திருமதி ஹூசைன்...//என்ன ஆச்சு உங்க எல்லாருக்கும்? படம் படமா எடுத்துப் போட்டு அசத்துறீங்கோ/// நீங்க தியரியைச் சொல்றீங்க, நாங்க பிரக்ரிகலா சொல்லுறோம் அவ்ளோதான்... ”பத்து வசனம் சொல்வதை ஒரு படம் தெளிவாகக் காட்டிவிடும்”.. இதை எங்கேயோ பார்த்தமாதிரி இல்லை???:):).

    நடக்கட்டும்.. நடக்கட்டும்.. /// எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்.... எது நடக்கட்டும்??:):).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    வரவுக்கு நன்றி திருமதி ஹூசைன்.

    ReplyDelete
  14. மேனகா, கீதாஆச்சல் மிக்க நன்றி. மேனகா தவறாமல் வாந்த்துறீங்கள் ஒவ்வொரு தடவையும்.

    ReplyDelete
  15. மிக்க நன்றி சந்து. இப்போ இருட்டைக் காண்பதுதான் கஸ்டமாக இருக்கு, அதனால் வெளிச்சத்திலதான் எல்லாம்.

    பூஸ் குளிரிலே நடுங்கிப் போய் கிடக்கிறார் போலும்... போர்வை அனுப்பவா?? /// சே... சே.... இப்ப போர்வை வாணாம்... வின்ரர் வரட்டும்.

    ReplyDelete
  16. இல்லை திருந்துவது போல நடித்தேன். எப்பூடி என் நடிப்பூ??? /// ஆ..... நான் கால் வச்சதாலதான் நடிக்கவே முடியுது போல, இனிக் காலை எடுத்திடுவேன் சாக்கிரதை:):) கால் வச்ச வனீஈஈஈஈஈஈ..

    ReplyDelete
  17. //நம்ம ஆள் ஒருத்தர் பிரியானியை சுட்டு போட்ட மாதிரி போட்டிருக்கலாமே ( பேரெல்லாம் கேக்கப்பிடாது ) // ஆ.. ஜெய்..லானி, நாட்டிலதான் சூடு நடக்குதென நினைத்தேன், இப்போ புளொக்கெல்லாம் சூடாகவே இருக்கே(இது வேற சூடு:)).

    நாங்க பேரெல்லாம் கேட்கமாட்டோம்.... அதுதான் ”கால்” ஐ எடுத்திட்டேன்...

    ReplyDelete
  18. விருதுக்கு வாழ்த்துக்கள் அதிராக்கா!

    அது சரி, "ஆ..அழகுக்கு அழகு:)"..இது என்ன ஹெடிங்? யாரு அழகுன்னு சொல்றீங்கோ..பூஸ் தானே? ஜீனோ அளவுக்கு க்யூட் இல்லைன்னாலும் பூஸ் இஸ் ஆல்ஸோ காட் எ போட்டோஜெனிக் ஃபேஸ்யா! ஸோ நீங்க போட்ட ஹெடிங் ஓக்கை என்று ஜீனோ ஒத்துக்குது.;)

    /நாங்க பேரெல்லாம் கேட்கமாட்டோம்.... அதுதான் ”கால்” ஐ எடுத்திட்டேன்.../ பூஸ் லைக்ஸ் சிக்கன் லெக்ஸ் எண்டு ஜீனோக்கு தெரியும்..ஆனால் இதென்ன??ஆ..மனுஷர்களின் காலும் எடுக்கிறதே..அப்பம் ஜீனோ கதி? ஜீனோ எதுக்கும் ஒரு பத்தடி உயரக் கதிரையில் இருந்துதான் உங்களோடை கதைக்கும் அதிராக்கா!

    ReplyDelete
  19. பூஸ் தானே? ஜீனோ அளவுக்கு க்யூட் இல்லைன்னாலும் பூஸ் இஸ் ஆல்ஸோ காட் எ போட்டோஜெனிக் ஃபேஸ்யா/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    //ஆனால் இதென்ன??ஆ..மனுஷர்களின் காலும் எடுக்கிறதே..அப்பம் ஜீனோ கதி? // ஜீனோவுக்கு நாலு காலெல்லோ? பிறகென்ன கவலை? அக்காவுக்கு அதுவும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புக்கு, ஒரு காலைக் கொடுத்தால், என்ன குறைஞ்சோ போயிடுவியள் தம்பி??

    //ஜீனோ எதுக்கும் ஒரு பத்தடி உயரக் கதிரையில் இருந்துதான் உங்களோடை கதைக்கும் அதிராக்கா! /// அப்பத்தான் ஜீனோவுக்கும் அக்காவுக்கும் உயரம் சரியாவரும் கதைக்க...கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.

    மிக்க நன்றி ஜீனோ.. தாமதமான வாழ்த்துக்கு. இனி தாமதிக்காமல் வாங்கோ ஓக்கை.

    ReplyDelete
  20. "முள் நிறைந்த செடியிலேதான் அழகு வாய்ந்த ரோஜா பூத்து மலர்கிறது,
    அதுபோல் சொல்லொண்ணாத துயரங்கிடையேதான் இன்பமும் மலரும்"

    இந்த வரிகளும் புகைப்படங்களும் பூனையும் ரொம்பவே அழகு!

    ReplyDelete
  21. குட்டி பூஸார் மங்கி கேப்புடன் அழகோ அழகு, தத்துவமும் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.